Friday, 6 May 2016

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமானஉறவு என்றால் உடனே சொல்வார்கள்தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில்விடுமுறை விட்டால் எந்தஊருக்கு செல்வாய் என்ற படிக்கும்பசங்களிடம் ஒரு காலத்தில்(தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்கபோனேன் என்று தான் சொல்வார்கள்.புதிதாக விளையாட்டுப்பொர ுள்வைத்திருந்தாள்யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்கமாமா என்பான் அந்தஅளவிற்கு அனைவருக்கும் பிடித்தமானஉறவு என்றால் அது தாய்மாமா தான்.எவன் ஒருவன் அக்கா தங்கையுடன்பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வாஎன்பது சொல்வடை.உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன்உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை,தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன்உறவு. தந்தையின்உறவு என்பது வேறு வகையானது. ஆனால்தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன்தொடுப்பும் இல்லாது வருவது.தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும்குழந்தைகளுக்குப ் உற்றபாதுகாவலனாய், நண்பனாக அந்தகுழந்தை கேட்டதை எல்லாம்வாங்கிக்கொடுத்த ு அதன் முகத்தில்அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன்தான். இன்றும் மாமா வருகிறார் என்றால்குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..தன் தங்கையின் குழந்தைகளை தன்குழந்தைகளைப் போல கவனிப்பான்.அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும்தாய்மாமனே முக்கியம் என்று தமிழர்பண்பாடு சொல்கிறது.காது குத்துவதிலிருந் து,திருமணத்திற்கு மாலை எடுத்துக்கொடுப்பது வரையிலும் இன்னும்அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும்தாய்மாமனே முன்னிற்பான்.தங்கையின் அல்லது அக்காவின்கணவருக்கு அதிக உதவிகள்செய்வது எங்கள்மாமா என்று உரிமையோடு அவருக்கு துணசெல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.தன் குடும்பத்தைக் கவனிப்பதை விடதங்கையின்தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன்அண்ணன் தனக்காக தன்னை வருத்திக்கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழவேண்டும்என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால்என்றால் அண்ணன்மாடி மீது மாடி கட்டி வாழ்வான்.எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழவிடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும்சிறந்து வாழ முடியவே முடியாது.சில ஊர்ப்பக்கம் தங்கையின்மகளோ அல்லது அக்காவின்மகளோ இயற்கை குறையோடு இருந்தால்தாய்மாமனுக்குத் தான்கட்டி வைப்பார்கள்.தாய்மாமனுக்கு வயதாகி விட்டால்அவனின் மகனுக்கு திருமணம்செய்து வைப்பார்கள். தாய் மாமன்உறவென்பது தியாகத்தின் உருவம். இந்ததியாகத்தை தந்தையோ, தனயனோ செய்யமுடியுமா?அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழவைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன்அல்லவா?உறவுகளில் மிகச் சிறந்த உறவு தாய்மாமன்என்று அடித்துச் சொல்லலாம்.ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர்தனது வேலை காரணமாக வெளியூர்களில்இருப்பதால் குழந்தைகளும்அவர்களுடனே இருக்கும் அதனால்இப்போதெல்லாம் தாய்மாமன்உறவு முறை சிறிது சிறிதாககுறைந்து வருகிறது. குழந்தையும்தாய்மாமனை மாதம்ஒரு முறை என்று பார்த்து மாமாவின்முகம் மறைகிறது என்பதுதான் இன்றையநிதர்சன உண்மை...நண்பரின் அப்பா தனது அக்காள்குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள்மரமாக நிற்கின்றனர்அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன்இருந்தேன் என்று பெருமை பட நானும்அவரும் பேசிக்கொண்டு இருந்தோம்அப்படியே ஒரு கட்டுரையாகஎழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள்அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம்கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம்வருகிறார்கள் என்று அவர்சொல்லும்போது அவரின் கண்களில் அந்ததாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர்ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும் ,கால ஓட்டத்தாலும் நாம் நம்தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்கமாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின்அருமை பெருமைகளை சொல்லி வளர்க்கவேண்டும் என்பது என் ஆவா.

No comments:

Post a Comment